.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Wednesday 7 September 2016

நேருவின்_சரித்திர_பிழைகள்

 நேருவின்_சரித்திர_பிழைகள் 
#மேலும்_தொடர்கின்றன‌ 

சுதந்திரம் பெற்ற பிறகு காஷ்மீர் "சட்டசபையில்" ஜம்முவை விட காஷ்மீருக்கு அதிக தொகுதிகளை வழங்கினார் நேரு.  1941 மக்கள் தொகை கணக்கு படி ஜம்முவில் 20 லட்சம் பேரும், காஷ்மீரில் 17 லட்சம் பேரும்,  "லதாக்" மற்றும் "கில்கித்தில்" 3 லட்சம் பேரும் வசித்தனர்.  ஆனால் இவற்றை குறித்து சிறிதும் கண்டு கொள்ளாமல்,  மக்கள் தொகை கணக்கெடுப்பையும் எடுக்காமல்,  மொத்தம் இருந்த 72 தொகுதிகளில் காஷ்மீருக்கு மட்டும் 43 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட‌து.    இதனால் ஜம்மு-காஷ்மீரை பொறுத்தவரை எந்த தீர்மானத்தையும்,  காஷ்மீர் பள்ளத்தாக்கே தீர்மானிக்கும் வகையில் அமைந்தது.  காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்களோ பெரும்பாலும் பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தானை ஆதரிக்கும் முஸ்லீம்கள். (தற்போது காஷ்மீர் பகுதியில் காஷ்மீருக்கு 46 தொகுதிகளும்,  ஜம்முவுக்கு 37 தொகுதிகளும், லதாக் பகுதிக்கு 4 தொகுதிகளும் உள்ளன)   மேலும் 1951ல் ஜம்மு-காஷ்மீரில் நடந்த‌ தேர்தலில், பெரும் முறைகேடுகள் அரங்கேறின‌. பல வாக்குசாவடிகள்  ஷெயிக் அப்துல்லாவின் "நேஷனல் கான்ஃபெரன்ஸ்" ஆல் கைப்பற்றப்பட்டது.  இதனால் அந்த கட்சி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது.  இதை குறித்து நேரு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  சொல்லப்போனால் நேருவின் ஆதரவோடுதான் அனைத்தும் அரங்கேறின. இந்த தேர்தலை அங்கீகரித்து இந்திய பாராளுமன்றம் ஒப்புதலை அளித்தது.  இதற்கு "எஸ் பி முகர்ஜி" போன்றவர்கள் கடும் ஆட்சேபங்களை தெரிவித்தனர்.  

காஷ்மீர் மற்றும் இந்திய சரித்திரத்தை புரட்டிப் போடும் "ஆர்டிக்கிள் 306-A"  அரங்கேறியது.  இதுதான் இன்றைக்கு இந்தியாவுக்கு மிகப்பெரும் தலைவலியை கொடுத்துவரும் "ஆர்டிக்கிள் 370"-ன்  முன்னோடி மற்றும் ஆதாரம்.  நேரு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் இந்த தனித்துவமான சட்டத்தை வடிவமைக்க, ஷேக் அப்துல்லாவை,  சட்டமேதை டாக்டர் அம்பேத்கரிடம் அனுப்பி வைத்தார்.  ஆனால்,  அம்பேத்கரோ இதை வடிவமைக்க மறுத்து விட்டார்.   அம்பேத்கார் இதை குறித்து ஷெயிக் அப்துல்லாவிடம் குறிப்பிடுகையில் "மிஸ்டர் அப்துல்லா,  நீங்கள் இந்தியா, காஷ்மீரை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்,  இந்தியா, காஷ்மீரை வளர்ச்சி பெற வைக்க வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள்,  காஷ்மீர் வாசிகள் இந்திய குடிமகன்கள் போல் சம உரிமை கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்,  ஆனால் நீங்கள் ஏன் இந்தியர்கள் காஷ்மீரில் சம உரிமை பெறக் கூடாது என்று நினைக்கிறீர்கள் ?  இது மிகத்தவறானது.  நான் இந்தியாவின் சட்ட அமைச்சர்.  நான் என் நாட்டுக்கு துரோகம் இழைக்க இயலாது"

அம்பேத்கார் அந்த சிறப்பு சட்டத்திற்கான வரையறையை வடிவமைக்க மறுத்த பின்னர் நேரு வேறு ஒருவரை வைத்து அதை வடிவமைத்தார்.  நேருவின் காங்கிரஸ் கட்சி அந்த "306 ஏ" சிறப்பு சலுகையை பாராளுமன்றத்தில் அங்கீகரித்தது.   நேரு இந்த நாட்டுக்கு செய்த மிகப்பெரும் துரோகமாக அது திகழ்ந்தது... திகழ்கிறது..

ஆக நேருவால் காஷ்மீருக்கு அதிக தொகுதிகள்,  அதிக ஆளுமை,  மற்றும் சிறப்பு சலுகைகள் என பலவும் வழங்கப்பட்டது.  இதன் மூலம் ஜம்மு காஷ்மீரால் தங்கள் பிராந்தியத்துக்கு தேவையான சட்ட திட்டங்களையும்,  குடிமகன்களுக்கு உண்டான வரையறைகளையும் இயற்றி கொள்ள முடிந்தது.  ஜம்மு காஷ்மீர் சட்டப்படி,  அதன் குடிமகன்கள் இந்திய குடிமகன்களாக கருதப்படுவார்கள்,  ஆனால் இந்திய குடிமகன்கள்,  ஜம்மு காஷ்மீரின் குடிமகன்களாக கருதப்பட மாட்டார்கள்.  மேலும் இந்தியாவின் "ஐ பி சி" சட்டைத்தை அமலாக்காமல் "ரன்பீர் பெனல் கோட்" (Ranbir Penal Code) எனும் தனிச்சட்டத்தை அது அமலாக்கியது..  ஜம்மு காஷ்மீரின் பிரதம மந்திரியாக பதவி ஏற்றார் ஷெயிக் அப்துல்லா !!  (ஜம்மு காஷ்மீர் தனிநாடு என்கிற வகையில் அப்போது அவர் பிரதம மந்திரி) இவை குறித்த பல தகவல்களை  நேரு பாராளுமன்றத்திற்கு கூட தெரியாமல் மறைத்து வைத்து காய் நகர்த்தியது வேறு தனிக்கதை.   

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு "தனி நாடு" அந்தஸ்தையும்,  தனி "கொடியையும்"  வழங்கிய நேருவை கண்டித்து ஒரு மாபெரும் போராளி களம் இறங்கினார்.   இந்தியா துண்டாடப்பட்ட‌தை தன்னுடைய உடல்,  பொருள் ஆவி என அனைத்தையும் கொண்டு எதிர்த்தவர் அவர்.  காஷ்மீரில் இந்திய குடிமக்கள் தங்குவதை தடை செய்யும் சட்டத்தையும்,  காஷ்மீருக்குள் செல்லும் இந்திய குடிமக்கள் அடையாள அட்டையை கொண்டிருக்க வேண்டும் எனும் நிபந்தனையையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.  இந்தியா முழுவதும் ஒரே சட்டம் இருக்க வேண்டும் என்று அவர் முழு மூச்சுடன் போராடினார்.  நேருவின் முஸ்லீம் ஆதரவு கொள்கையை அவர் சாடினார்.  காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டிருந்த இந்த சிறப்பு சலுகைகளை எதிர்த்து உண்ணாவிரத்தை தொடங்கினார் அந்த மாவீரர்.   அவர் பெயர் "ஷ்யாம் பிரசாத் முகர்ஜி"                         
நேரு மீண்டும் சொதப்பினார்.... 

ஜின்னாவுக்கும் சரி , இதர பாகிஸ்தானியர்களுக்கும் சரி.. காஷ்மீர் முஸ்லீம்கள் மீது என்றுமே பெரிய மரியாதை கிடையாது.... காஷ்மீர் முஸ்லீம்கள் ஹிந்துக்களின் சிறுநீரில் இருந்து பிறந்தவர்கள் என்று சொன்னவர் ஜின்னா..[ இது தெரியாமல்தான் அந்த அடிமுட்டாள்கள் பாகிஸ்தான் கொடியை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள்...]

தேசப்பிரிவினை நேரம்...ஓரளவு இந்திய - பாக் எல்லைகள் உறுதியாகிவிட்டன...ஆனால் காஷ்மீர் மட்டும் எந்தப் பக்கமும் சேரவில்லை... அன்று காஷ்மீரை ஆண்டு கொண்டிருந்தவர் ஒரு ஹிந்து மன்னர் .. பெயர் ஹரிசிங்... 

காஷ்மீர் இஸ்லாமியர்களின் தலைவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தவர் ஷேக் அப்துல்லா , அங்கிருக்கும் மக்களை அடித்து விரட்டிவிட்டு , முழுமையான இஸ்லாமிய தேசம் ஒன்றை அமைக்கும் கனவு கொண்டவர்...

ஹரிசிங்கிற்கு இந்தியாவுடன் இணைவதில் தயக்கம் இருந்தது.. காரணம் அவருக்கு நேருவைப் பிடிக்காது...            [ நேருவுக்கு ஷேக் அப்துல்லாவை பிடிக்கும் ] அப்போது ஹரிசிங்கின் ஆலோசகராக இருந்தவரின் மனைவி ஒரு பிரிட்டிஷ் பெண்மணி... அவர் மௌண்ட்பேட்டனுக்கு நெருக்கமானவர்... அந்த ஆலோசகர் காஷ்மீர் இந்தியாவுடன் சேரக்கூடாது என்று ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார்....

காஷ்மீரை தாக்குவதற்கு இது தான் நல்ல சமயம் என்று தீர்மானித்தார் ஜின்னா... நேரடியாக தாக்கினால் பிரச்சினை ஆகிவிடும் , ஆகவே பட்டானியர்கள் என்னும் பழங்குடியினரை காஷ்மீரை தாக்கும்படி உத்தரவிட்டார்... படடானியர் போர்வையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இருந்தனர்  .. ஒவ்வொரு ஆயிரம் பட்டானியர்களுக்கும் ஒரு பாகிஸ்தான் கமாண்டர் தளபதியாக நியமிக்கப்பட்டனர்... 

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம் , கொலை செய்யலாம் , யாரை வேண்டுமானாலும் கற்பழிக்கலாம்... காஷ்மீரை ஆக்கிரமிப்பது மட்டும் தான் முக்கியம் என்று சொல்லி அனுப்பினர்.... பட்டானியர்கள் காஷ்மீரை தாக்க ஆரம்பித்தனர்....

அப்போது இந்திய ராணுவத்தில் ஒரு சிக்கலான நிலைமை இருந்தது.... இந்தியா , பாகிஸ்தான் இரண்டு நாட்டு ராணுவங்க‌ளிலும் பிரிட்டிஷ்காரர்களே உயர் ராணுவ அதிகாரிகளாக இருந்தார்கள்... 

பாகிஸ்தானின் ராணுவத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த வெள்ளையர்கள் ஜின்னாவின் அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் உறு துணையாக இருந்தார்கள்.... காரணம் இந்தியா பிரிய வேண்டும் ,, பெரிய நாடாக இருந்தால் வருங்காலத்தில் சக்தி உள்ள நாடாக மாறி விடும் என்ற பயம் வெள்ளையர்களுக்கு இருந்தது  

ஆனால் இந்திய ராணுவத்தின் உயர் பொறுப்பில் இருந்த வெள்ளையர்களோ, நேருவை கைக்குள் வைத்து கொண்டு  படேல் போன்ற தலைவர்களின் பேச்சை கேட்காதவர்களாகவும் , மறைமுகமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தனர்....

காஷ்மீருக்குள் புகுந்த பட்டானியர் கும்பல் வெறியாட்டம் ஆடியது... எல்லா வீடுகளும் , கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டன‌...  ஆண்கள் கொல்லப்பட்டனர் , பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்... ரத்த ஆறு ஓடியது... ஹரிசிங் செய்வதறியாது திகைத்தார்....இனி இந்தியாவின் துணையில்லாமல் சமாளிக்கமுடியாது என்பதை உணர்ந்தார்... 

இருந்தும் நேரு - ஷேக் அப்துல்லாவின் நட்பை நினைத்து ஒதுங்கவும்  செய்தார்.... 

இந்த நிலையில் ஒரு அதிசயம் நடந்தது.... மன்னர் ஹரிசிங்கை இந்தியாவுடன் சேரும் முடிவை ஏற்க வைக்க ஒரே ஒருவரால் தான் முடியும் என்று படேல், நினைத்தார்... அவர் தான் அவர் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் பரமபூஜனீய கோல்வர்கர்... 

இதை பற்றி நேருவிடம் பேசி , நம் நாட்டுக்கு  காஸ்மீரை இணைப்பது தான் நல்லது என்று பேசி குருஜியை சந்திக்க சொன்னார் படேல் 

குருஜியை நேரில் சந்தித்த நேரு , ஹரிசிங்குடன் பேசி சம்மதிக்க வைக்கும்படி கேட்டுக் கொண்டார்... குருஜிக்கு தெரியும் படேல் சிந்தனை படி நேரு தம்மை சந்த்திக்கிறார் என்று ,,, இருந்தாலும் காட்டி கொள்ளாமல்                                

நேருவின் வேண்டு கோளை ஏற்ற குருஜி காஷ்மீர் சென்று மன்னர் ஹரிங்கை சந்தித்து இந்தியாவுடன் சேரும் முடிவை ஏற்க வைத்தார்... காஷ்மீர் முறைப்படி இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தம் கையெழுத்தானது.... 

பட்டானியர் கும்பலை ராணுவ நடவடிக்கை மூலம் அடக்கும் பொறுப்பும் இந்தியாவுக்கு வந்தது... ஆனால் இந்த நிலையிலும் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை மேற் கொள்ள மௌண்ட் பேட்டனும் ராணுவத்தின் உயர் பொறுப்பில் இருந்த வெள்ளையர்களும் சம்மதிக்கவில்லை... 

நடப்பது காஷ்மீர் மக்களின் கிளர்ச்சி .. அதை ராணுவ நடவடிக்கை மூலம் அடக்கினால் தவறாகிவிடும் என்று சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டிருந்தனர்....

அப்போது ஒரு கொடூரம் நடந்தது...காஷ்மீருக்குள் ஊடுருவிக் கொண்டிருந்த பட்டானியர்கள் , வழியில் இருந்த கிறித்தவ மடாலயம் ஒன்றை தாக்கினர்.... அங்கிருந்த பாதிரியார்கள் உள்ளிட்ட அனைத்து கிறித்தவர்களும் கொல்லப்பட்டனர்... கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்பட்டனர்... சர்ச் சூறையாடப்பட்டது...

இது வரை தர்மநியாயம் பேசிக் கொண்டிருந்த மௌண்ட்பேட்டனுக்கு இப்போது தர்ம சங்கடம் ஆகிவிட்டது.... கொல்லப்பட்டவர்கள் கிறித்தவர்கள் ஆயிற்றே ? ஹிந்துக்கள் கொல்லப்பட்டால் எகத்தாளம் பேசிக் கொண்டிருக்கலாம்... கிறித்தவர்கள் உயிர் விலை மதிப்பற்றது ஆயிற்றே ? வேறு வழியில்லாமல் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற் கொள்ள மவுண்ட்பேட்டன் உத்தரவிட்டார்...

ஆனால் அதற்குள் காஷ்மீரில் நிலவரம் கைமீறும் நிலைக்கு வந்து விட்டது....  பட்டானியர் கும்பல் ஸ்ரீநகருக்கு மிக அருகில் வந்து விட்டனர்... எந்த நேரத்திலும் விமான நிலையம் அவர்கள் கைக்குள் விழும் நிலை......  விமான தளத்தின் ஓடுபாதையோ , ராணுவ விமானங்கள் இறங்கும் அளவுக்கு இல்லாமல் பழுதடைந்து கிடந்தது....

இந்நிலையில் களமிறங்கியது ஆர்.எஸ்.எஸ்.... தங்கள் உயிரையும் பொருட்படுத்தாத ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் ஓடுபாதையை போர்க் கால வேகத்தில் சீரமைத்து , இந்திய ராணுவ விமானங்கள் இறங்க வழி செய்து கொடுத்தனர்...  நம் ராணுவம் ஸ்ரீ நகரில் இறங்கி பட்டானியர் கும்பலை ஓட ஓட விரட்டியது....

அவர்களை அடித்து விரட்டி கொண்டிருக்கும் வேளையில் நேரு மீண்டும் சொதப்பினார்.... படேல் மற்றும் இந்திய ராணுவத்தில் இருந்த இந்திய அதிகாரிகளின் பேச்சைக் கேட்காமல்  ஷேக் அப்துல்லா மற்றும் மவுண்ட்பேட்டன் ஆகியோரின் ஆலோசனையின் படி  காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா வுக்கு எடுத்துச்சென்றார்.... போர் நிறுத்தம் ஏற்பட்டது... காஷ்மீருக்குள் குறிப்பிடத்தக்க தூரம் ஊடுறிவியிருந்த , பட்டானியர்கள் என்ற போர்வையில் ஒளிந்திருந்த பாகிஸ்தான் ராணுவம் அதே இடத்தில் நிலை கொண்டது... அந்த பகுதிதான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படும் ஆசாத் காஷ்மீர்..

ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தம் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காஷ்மீர் , நமக்கு தீராத தலைவலியாக மாறிப் போனது இப்படித் தான்....

No comments:

Post a Comment