.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Monday 29 August 2016

சர்க்காரியா

சர்க்காரியா' என்ற பெயரைக் கேட்டால் இன்றும் தி.மு.க.வினருக்கு கிலி எடுக்கும். அப்படி பயமுறுத்தும் அளவுக்கு அது யார் ர்க்காரியா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? அவர் ரஞ்சித்சிங் சர்க்காரியா..! உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற திறமையான, நியாயமான நீதிபதி..!

1975 ஜூன் 15 இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். அன்றுதான் இந்திராகாந்தியால் நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 1976-ல் தி.மு.க. அரசை இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்கிறார். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டவுடன் உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் தி.மு.க. அரசின் ஊழல்களை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார் இந்திராகாந்தி.

நீதிபதி சர்க்காரியா ஒரு நீண்ட விசாரணையை நடத்தி தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். இந்த விசாரணை அறிக்கையும் மற்ற ஊழல் விசாரணைகளைப் போலவே கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும், அன்றைய தி.மு.க. ஆட்சி நிர்வாகம் எப்படி இருந்தது என்பதையும் அந்த விசாரணை அறிக்கை தெளிவாகத் தெரிவிக்கிறது.

தி்.மு.க. ஆட்சி நடத்திய லட்சணம் தெரிந்துவிடும் என்பதற்காக அந்த அறிக்கையின் நகல்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. நெருக்கடி நிலையின் அத்துமீறர்களை விசாரிப்பதற்கென்று அமைக்கப்பட்ட ஷா கமிஷனின் அறிக்கையை இந்திராகாந்தி இது போலத்தான் ஒரு நகல் விடாமல் அழித்துவிட்டதாகத் தெரிகிறது. முன்னாள் ஜனதா கட்சித் தலைவர் செழியனின் முயற்சியால் அந்தப் புத்தகம் இப்போது புதிய வடிவில் கிடைக்கிறது. ஆனால் சர்க்காரியா கமிஷன் அறிக்கைக்கு அந்த பாக்கியமெல்லாம் இல்லை. ஏறக்குறைய அனைத்து நகல்களுமே அழிக்கப்பட்டுவிட்டது.

தி.மு.க.வின் ஆட்சியில் அதிகாரிகள் நடவடிக்கை குறித்து சர்க்காரியா இவ்வாறு கூறுகிறார்..

"சில முதுநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தாங்கள் தவறாக நடக்கிறோம் என்று தெரிந்தே கடமையில் இருந்து தவறியுள்ளார். அமைச்சர் வாய் மொழியாகப் பிறப்பித்த கட்டளைகளை நிறைவேற்றியதைத் தவிர வேறு வழி ஏதும் தங்களுக்கு இல்லை” என்று அவர்கள் கூறியுள்ளனர். அமைச்சர் சார்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி லஞ்சம் வாங்கித் தரும் ஆளாக தங்களைப் பயன்படுத்திக் கொள்வதை அவர்கள் அனுமதித்துள்ளனர்.

அரசு அதிகாரிகள் அமைச்சரின் நல்லெண்ணத்தைப் பெற வேண்டும் என்பதற்காக முறை தவறிச் செயல்பட்டிருக்கிறார்கள். அசட்டையாகவும், மெத்தனமாகவும் அஞ்சிச் சாகும் கோழைகளாகவும் உள்ள இத்தகைய அரசு அதிகாரிகளால் அதிகார வர்க்கம் முழுவதும் நேர்மை கெட்டுவிடுகிறது. அதனால் அவர்களிடம் பரிவு எதுவும் காட்ட வேண்டியதில்லை.." என்று காட்டமாகக் குறிப்பிடுகிறார்.

சர்க்காரியா நடத்திய விசாரணையில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வழக்கமாக விசாரணை கமிஷன்களுக்கென்று ஒரு அளவுகோல் உண்டு. அந்த கமிஷனை அமைத்த ஆட்சியாளர்கள் என்ன விரும்புகிறார்களோ அவ்வாறே அறிக்கை கொடுப்பதற்கு வசதியாக நீதிமன்றங்களில் கடைப்பிடிக்கப்படும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்ற அளவுகோலைப் பின்பற்றாமல் தங்கள் இஷ்டத்திற்கு விசாரணையை நடத்துகிறார்கள்.

ஆனால் சர்க்காரியா, ஒரு குற்றவியல் நீதிமன்றத்தில் கடைப்பிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளையும் தவறாமல் கடைப்பிடித்தார். பூர்வாங்கமான ஆதாரங்கள் பல குற்றச்சாட்டுக்களில் இருந்தும், சந்தேகத்திற்கு இடமில்லாவகையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று பல குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.

இவ்வளவு சிறப்பாக விசாரணை நடத்தி, கொடுக்கப்பட்ட அறிக்கை அரசியல் காரணங்களுக்காக குப்பைத் தொட்டியில் போடப்பட்டது. நெருக்கடி நிலைக்குப் பிறகு, தி.மு.க.வோடு காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது. இதனால் இந்த விசாரணைக் கமிஷனின் பரிந்துரையை குப்பையில் போட்டார் இந்திராகாந்தி.

அப்போதைய நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன தெரியுமா..? தி.மு.க., இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்ததால், சர்க்காரியா விசாரணையை கல்லறைக்குள் புதைத்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார் இந்திரா. இன்றும் தி.மு.க. காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறது. ஆனால் ஸ்பெக்ட்ரம் விசாரணையில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் அந்த அளவுக்கு உதவி செய்யவில்லை. மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் என்பது போல உதவி செய்கிறோம். ஆனால் செய்ய மாட்டோம் என்று தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது. அவர் இந்திரா. இவர் தந்திரா இல்லையா..?

உச்சநீதிமன்றம் என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால் ஸ்பெக்ட்ரம் விசாரணையும், சர்க்காரியா கமிஷன் அறிக்கை புதைக்கப்பட்ட அதே கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கும்.

புதைக்கப்பட்ட அந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை..!

உங்களுக்கு பரம்பரைக் கட்டிடம் ஒன்று இருக்கிறது.. அந்தக் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக ஒருவர் குடியிருக்கிறார். அந்தக் கட்டிடத்தில் வைத்து அவர் தொழில் செய்வதால், அவருக்கு மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால் உங்களுக்கு அவர் வருடத்துக்கு 10 ஆயிரம் ரூபாய்தான் வாடகை தருகிறார் என்றால் ஒப்புக் கொள்வீர்களா..? இதே கதைதான் சென்னை அண்ணா சாலையில் இருந்த க்ளோப் தியேட்டரின் கதையும்..

அண்ணா சாலை எல்.ஐ.சி. அருகே ஒரு பெரிய கட்டிடம் இருக்கிறதல்லவா? அது, முதலில் குளோப் தியேட்டராக இருந்து நியூ க்ளோபாக மாறி, பிறகு அலங்கார் தியேட்டராக மாறி இப்போது வணிக வளாகமாக ஆகியிருக்கிறது..

அந்தக் கட்டிடம் குஷால்தாஸ் என்பவரின் பரம்பரைச் சொத்தாகும். அந்தக் கட்டிடத்தை வரதராஜபிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். குத்தகை கட்டணமாக குஷால்தாஸுக்கு ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன். ஆனால் தியேட்டர் நடத்துவதால் வரதராஜனுக்கு வாரந்தோறும் 8000 ரூபாய் வருமானம் வருகிறது. அதாவது ஆண்டுக்கு 4,14,000 ரூபாய் வரதராஜப் பிள்ளைக்குக் கிடைக்கும்.

இந்த வருமானத்தைப் பார்த்தும், எதிர்ப்பு தெரிவிக்காத குஷால்தாஸ், குத்தகை முடிவடைந்ததும் குத்தகையை புதுப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார்.. வாரம் 8000 ரூபாய் வருமானம் பார்க்கும் வரதராஜபிள்ளை விடுவாரா? கட்டிடத்தை எனக்கே விற்றுவிடுங்கள் என்று அடிமாட்டு விலைக்குக் கேட்கிறார். இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்துக்குச் செல்கிறது. ஊச்சநீதிமன்றம், குஷால்தாஸுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறது. அது மட்டுமில்லாமல், ஆறு வார காலத்திற்குள் இடத்தைக் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.

கட்டிடத்தின் மீதிருந்த ஆசையால் சட்டத்தையே மாற்ற நினைத்த வரதராஜன், தி.மு.க. அரசின் அதிகார மையங்களை அணுகுகிறார். அப்போதெல்லாம் அமைச்சர்களும், அதிகார மையங்களாக இருந்தார்கள். முக்கிய அதிகார மையமாக முரசொலி மாறன் இருந்தார்.

சர்க்காரியா கமிஷனில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்களின்படி வரதராஜப் பிள்ளை முதலில் முரசொலி மாறனை அணுகுகிறார். அவர் அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்குமாறு அறிவுறுத்துகிறார். ப.உ.சண்முகம், சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு ஒரு லட்சம் ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கிறார். முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் ப.உ.சண்முகத்துக்கு கொடுக்கப்படுகிறது.

அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த வரதராஜப் பிள்ளையிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டால் வெறும் 40 ஆயிரம்தான் கொடுத்திருக்கிறீர்கள்.. சட்டத்தைத் திருத்த மேலும் 60 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் என்று கருணாநிதி கூறியதாகவும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் வரதராஜப் பிள்ளை தன்னிடம் 60 ஆயிரம் இல்லை என்றும், 30 ஆயிரம்தான் மேற்கொண்டு தர முடியும் என்றும் சொல்கிறார். அதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி 30 ஆயிரம் ரூபாயை ஒரு பழுப்பு நிறக் கவரில் வைத்து பெற்றுக் கொண்டதாகவும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாகவே மந்த கதியில் செயல்படும் அரசு இந்திரம் இந்தப் பணத்தைப் பெற்ற பிறகு மின்னல் வேகத்தில் செயல்பட்டது. உடனடியாக சட்டப் பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டிய வரைவுச் சட்டம் முதல் நாள்தான் கொடுக்கப்படுகிறது.

இதைப் பற்றி அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த டாக்டர் ஹெண்டே, சர்க்காரியா கமிஷன் முன் சாட்சியம் அளித்தார். அவசரம், அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டு தபாலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினால் தாமதமாகும் என்று ஒரு அதிகாரி விமானத்தில் டெல்லி சென்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று வந்தார்கள். இந்தச்சட்டத் திருத்தத்தின் மூலம் ஒரிஜினல் உரிமையாளரிடம் சேர வேண்டிய சொத்து ஆட்டையைப் போட்டவருக்கு வந்து சேர்ந்தது. இத்தோடு இந்தக் கொடுமை முடியவில்லை..

இந்தச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் வரதராஜப் பிள்ளை நிலத்தை தான் நிர்ணயிக்கும் விலைக்கு தனக்கே விற்க வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றங்களை அணுகுகிறார். ஆனால் உயர்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்ததையடுத்து உச்சநீதிமன்றம் செல்கிறார். அங்கே வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மீண்டும் தி.மு.க.வின் அதிகார மையத்தை அணுகுகிறார்.

அவரது விருப்பத்தின்படி, மீண்டும் இரண்டாவது முறையாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இது பற்றிக் குறிப்பிடும் சர்க்காரியா, “முதல் திருத்தத்தின் விளைவாக தனது நோக்கம் ஈடேற முடியாத வரதராஜ பிள்ளைக்காகவே இந்த இரண்டாவது திருத்தமும் செய்யப்பட்டது என்பதை இது வெளிப்படையாகக் காட்டுகின்றது” என்று கூறுகிறார்.

இந்த விசாரணையி்ன முடிவில், நீதிபதி சர்க்காரியா, “இந்தச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து விவாதித்து நிறைவேற்றுவதில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியும், உணவு மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ப.உ.சண்முகமும், சட்டத் துறை அமைச்சர் மாதவனும், வரதராஜப் பிள்ளைக்கு மறைமுகமாக உதவ வேண்டும் என்ற தீய நோக்கத்துக்காக உத்தரவிட்டிருக்கின்றனர்” என்று கூறுகிறார்.

சட்டமன்றத்தையும், சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் தனி நபரின் நலனைக் கருத்திக் கொண்டு தி.மு.க.வினர் எப்படியெல்லாம் தங்கள் இஷ்டத்திற்கு வளைத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா..?

இந்தக் கதை இன்றுவரை தொடர்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கிரவுண்டு நிலங்கள் மகாபலிபுரம் அருகே என்று அறிவித்தபோது மார்க்சிஸ்ட் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி அது நிறைவேற்றப்பட்டது.

சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்காக ஆஜரானவர் பிரபல வழக்கறிஞர் சாந்திபூஷன். ஆனால் தற்போது  உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை ஒழுங்காக நடைபெறுவதற்கும், கருணாநிதியின் குடும்பத்தினர், சி.பி.ஐ.யால், விசாரிக்கப்படுவதற்கும் காரணமான முக்கியமான வழக்கை தாக்கல் செய்து அதில் வாதிட்டுவருவது இதே சாந்திபூஷனின் மகன் பிரசாந்த் பூஷன்தான் என்பது காலத்தின் கோலம்தானே..?🙏

Sunday 28 August 2016

பழங்கள் சாப்பிடும் முறை;


பழங்கள் சாப்பிடும் முறை;

பழங்கள் ஒரு முக்கியமான உணவு;
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட 
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.
அதனால் தயவு செய்து பழங்களை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன்சாப்பிடுங்கள்.!!

நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.

கிவி பழம்;

இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.

ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

ஆப்பிள்;

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!

ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!

ஸ்ட்ராபெர்ரி :

பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

ஆரஞ்சு:

இனிப்பான மருந்து.
ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.

தர்பூசணி;

மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.

கொய்யா& பப்பாளி

இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.

கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.



மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

👃👀👂👅👄💪😊

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில்
மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்
குழந்தையாக இருக்கும் போது அவனுடைய
உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர
வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற
எலும்புகளுடன் இணைந்து விடுகிறது...

2. நாம் 6விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.
சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்...

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள்
ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில்
சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக
வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம்
தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்
இடது கால் செருப்பை விட வலதுகாலின்
செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த
சிறு வித்தியாசத்தால் தான்...

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள்
தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது.
அவனது எலும்பு தொடர்ந்து 4
நாட்களை வரை செயல் படுகிறது. தோல்
தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண்
மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம்
பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம்
செயல்படுகிறது. அவனது சிறுநீரகம்
தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக
அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல்
உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்
லை...

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்
ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில்
குழந்தை பிறக்கிறது. 28
நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும்
பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.
இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள
பெண்களுக்கு குழந்தை பிறப்பும்
சற்று முன்னாடியே (குறை பிரச வம்)
அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில்
கவனம் கொள்ள வேண்டும்...

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8
மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம்
பகலில் நமது வேலைகள்
செய்யும்போது தண்டு வடத்திலுள்ள
குறுத்தெலும்பு வட்டுகள்
ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால்
உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்
தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால்
நமது உடம்பின் உயரம் கூடுகிறது...

7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம்
127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள்
உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்
ஆயுட்காலம் 120 நாட்கள்...

8. நம்உடலில் சுமார் 20 லட்சம்
வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6
லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன...

9. நமது கைகளில் நடுவிரலில் நகம்
வேகமாகவும், கட்டை விரலில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல்பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம்
மெதுவாக வளர்கிறது...

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல்
தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம்,
இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்...

11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக்
குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர்
கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4
முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.

12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித
உறுப்பு கட் டை விரல்கள்...

13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம்
தாடை எலும்பு...

14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம்
தண்ணீரைக் கொண்டதாகும்...

15. கல்லீரல் 500 விதமான
இயக்கங்களை நிகழ்த்துகிறது...

16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630...

17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம்
பங்கு ரத்தம் உள்ளது...

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்த
 இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1
மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன...

19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம்
வயது வரை வளர்கிறது...

20. மனித முகங்களை மொத்தம் 520
வகைகளுக்குள் அடக்கி விடலாம்...

21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ...

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9
லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்
போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்
தேவைப்படுகிறது...

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும்
மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள்
ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால்
போன்றவற்றால் பாதிப்படைகிறது...

24.பெண்களைவிட
ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது.
பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்
ஆண்கள் மூளையில் இருக்கிறது...

25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்...

26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்...

27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்...

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க
நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள்
கிடை யாது...

29. மூளையின்மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது...

30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்...

31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /
கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற
வேறுபாடே தெரியாது...

32. மனித உடலின் தோலின் எடை 27
கிலோ கிராம்...

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன...

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை,
முழங்காலை மாற்றலாம். ஆனால்
மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம்
ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன்
தான் அவன் அந்நியன் தான்...

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க
இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின்விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும்
போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம்அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது...

36. நமது உடலிலுள்ள செல்கள்
பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது.
ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள்
இறந்து புது செல்கள் பிறக்கின்றன...

37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம்
வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல்
இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம்
வளர்கிறது...

38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54
தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது...

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின்
இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.
ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம்
ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப்
செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை,
கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால்
போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்...

40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத்
தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்
திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது...

41. நமது உடலின் நீளமான
எலும்பு தொடை எலும்பு தான்...

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500
சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100
சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது...

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால்
உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்
வலியை உணர்த்துவது மூளையே...

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம்
கூடுதலாக வியர்க்கிறது...

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்...

46. உடலில் ரத்தம் பாயாதபகுதி கருவிழி மட்டுமே...

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்
பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும்
உட்கொள்கிறோம்..

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர
அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன...

49. நம்முடைய தலை ஒரே எலும்பால்
உருவானது அல்ல, 22 எலும்புகளில்
உருவானதாகும்...

50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள்
உள்ளதாகவும், பெண்களின் முடியை விட
ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது..

51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில்
தூங்கி விடுகின்றான்...

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்...

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன்
முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக
இவ்வளவு வார்த்தைகளைத்தான்
பயன்படுத்துகிறார்கள்...

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள்உள்ளன...

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம்வளர்கிறது..

56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040தடவை சுவாசிக்கின்றோம்..

57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..

58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள்
வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்
சாதனைகளை நிகழ்த்தலாம்..

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும்
இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.
இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது...

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும்வளரும்...

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த
சிவப்பணுக்கள் உள்ளன...

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக
குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி,
வயிற்றுப் போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்
எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர்
வியர்வை வெளியிடுகிறான்..

65. சிந்தனையின் வேகம்
அல்லது ஒரு யோசனையின் தூரம்
என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150
மைல்களாகும்..

66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம்
அதிகமாக துடிக்கிறது...

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல்
நுனிவரை உள்ள நீளமும், மேவாய்
கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30
கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்..

69. உடலில் உண்டாகும் உஷ்ணம்
வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..

70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல்
முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்
இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம்
30 செகண்டு ஆகும்...

71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர்
ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய
அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான்
மனிதனுக்கு கோபம் வருகிறது...

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம்ஆகும்.

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக
நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்
ஆணுக்கு பெண்குணமும்,
பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்...

74. தானாகமூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம்
ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது...

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50
லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில்
22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால்
மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை..

76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான்.
அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால்
என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான்
அவரவர் இதயம் இருக்கும்...

77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள
'ஆலவியோலி' என் னும் சிறிய காற்று அறைகளின்
எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..

78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால்ஆனது..

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள்உள்ளன..

80. மனிதனுக்கு 4 வகையான பற்கள்உண்டு..

81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள்9000 உள்ளன..

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள்உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும்
தசை நாக்கு..

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான
பகுதி மூளை,மூளையின்
வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால்
உருவானது..

85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம்தூங்குகிறான்.

86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½
லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள்.
இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.

87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600
மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார்
375 முறை ஏற் படுகிறது..

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம்
தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4
கோடி தடவை..

90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20
ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..

92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900
பென்சில்களை உரு வாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7
பார் சோப்புகளை செய்ய லாம்..

94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல
ஆணி ஒன்று செய்யலாம்..

95. மனித உடலில் அதிகமாக காணப்படும்
தாதுப்பொருள் கால்சியம்..

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர்
நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம்
வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது...

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன்
குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்ககொட்டாவி விடுகிறோம்...

98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின்
எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும்
நின்று விடுகிறது.
இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான்
சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத
அளவிற்கு வளர்ச்சி...

99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான்
என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்
வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள்
வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது..

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

தலை முடி வளர இயற்கை மருத்துவங்கள்

தலை முடி வளர இயற்கை மருத்துவங்கள்

முடி உதிர்வதைத் தடுக்க:

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். 

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

மண்பாண்ட மகிமை:

மண்பாண்ட மகிமை:

உலகின் முதன் முதல் மனிதன் செய்த தொழில் மண்பாண்டம். மண்பாண்ட சமையல்,ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது

☆ உணவில் சுவையைக்
கூட்டக்கூடியது. நீண்ட
நேரத்துக்குக் கெடாமலும் சுவை
மாறாமலும் இருக்கும். உணவும்
எளிதில் செரிமானம் ஆகும்.

☆ மண் பாத்திரத்தில் தயிரை
ஊற்றிவைத்தால் புளிக்காமல்
இருக்கும். தண்ணீர்
குளிர்ச்சியாகவும்,
சுவையாகவும் இருக்கும்.

☆ மண்பாண்டம் தவிர்த்து அந்தக்
காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு,
பித்தளை, வெண்கலம் என ஐந்து
வகையான உலோகங்களை நம்
முன்னோர்கள் பயன்படுத்தினர்.

☆ வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக்
குளிர்ச்சியைத் தரக்கூடியது.
பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச்
சமநிலைப்படுத்தும். பித்தளை
மற்றும் செம்புப் பாத்திரத்தில்
சமைக்கும் உணவு வயிறு
தொடர்பான பிரச்னைகள் வராமல்
தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக்
குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு
உண்டு.

☆ செம்புப் பாத்திரத்தில்
தண்ணீர்வைத்துக் குடித்தால்,
இருமல், இரைப்பு நோய் வராது.
இரும்புப் பாத்திரத்தில்
சமைக்கும்போது, உடலில் ரத்த
விருத்தி அதிகரிக்கும். உடலை
எஃகு போல உறுதிப்படுத்தும். கண்
சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
இளைத்தவனுக்கு இரும்புப்
பாத்திரம் என்பது அந்தக்கால
அறிவுரை.

☆ இப்படி உடல் ஆரோக்கியத்தைத்
தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப்
பாத்திரங்களைப் பயன்படுத்தினால்,
உடல் ஆரோக்கியமாக இருக்கும்.்

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு (7) அடிகள் நடப்பதற்கு என்ன பொருள் ?

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு (7) அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்  ?
**************************

சமஸ்கிரதத்தில் இதை " சப்தபதி " என்று கூறுவார்கள்.  ஆதாவது  ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேரந்து நடந்து வருவதாகும்.  அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம்
இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு தனது பிரார்த்தனையை சொல்கிறான்.

♥ முதல் அடி  :  பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்

♥ இரண்டாம் அடி  :  ஆரோக்கியமாக வாழ வேண்டும்

♥ மூன்றாம் அடி  :  நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்

♥ நான்காம் அடி  :  சுகத்தையும் செல்வத்தையும் அளிக்க வேண்டும்

♥ ஐந்தாம் அடி  :  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்

♥ ஆறாம் அடி  :  நாட்டில் நல்ல பருவங்கள் தொடர வேண்டும்

♥ ஏழாம் அடி  :  தர்மங்கள் நிலைக்க வேண்டும்

என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது.  இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் பூக்ஷமமான மனோவியல் விசயத்தை இந்து தர்மத்தில்  உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.  இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால்  அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம். உதாரணமாக சாலையில்  நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவர்  நடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாக நடக்க நேர்ந்தால் ,  ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிடுவோம்.  முழுமையாக ஏழு அடிகள்  ஒன்றாக நடக்க மாட்டோம்.  இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்து விடும்.  இதை
அறிந்த முன்னோர்கள் ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதையும் நாம் உணர வேண்டும்..........

அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர்


  • அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர்
  • நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும்.அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான். இது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தனது அனுபவங்களைப் பற்றி அவர் நினைவு கூர்ந்ததாவது:
  • அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.
  • அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர்.
  • இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே. சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார்.
  • அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார்.
  • அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர்.
  • தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர்.


பாட்டி வைத்தியம் -வாழை இலை

பாட்டி வைத்தியம் - 
வாழை இலை:-

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.


2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.


4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் .
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்

Saturday 27 August 2016

ஜம்மு_காஷ்மீர்_சில_முக்கிய_புள்ளி_விவரங்கள்

ஜம்மு_காஷ்மீர்_சில_முக்கிய_புள்ளி_விவரங்கள் 

நாம் அனைவரும் அவசியம் அறிய வேண்டியவை.

01. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலப்பரப்பில்  காஷ்மீர் வெறும் 15%, ஜம்மு 26%, லடாக் மட்டும் 59%.

02. மொத்த ஜனத்தொகை 1.25 கோடி. சுமார் 86,000 சதுர கிமீ பரப்பளவு. அதில் 85% இஸ்லாமியர்கள்.

03. காஷ்மீரில் உள்ள 69 இலட்சம் பேரில் 55 இலட்சம் பேர் காஷ்மீரி மொழியும், மீதம் உள்ள 14 இலட்சம் பேர் உருது மொழியும் பேசுகின்றனர். 

04. ஜம்முவில் உள்ள 53 இலட்சம் பேர் டோக்ரி, பஞ்சாபி, ஹிந்தியும், லடாக்கில் உள்ள 3 இலட்சம் பேர் லடாக்கி மொழியும் பேசுகின்றனர்.

05. காஷ்மீரில் 7. 5 இலட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் சட்டவிரோதமாகப் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி வசிக்கின்றார்கள்.

06. ஜம்மு காஷ்மீரில் தேசியத்துக்கு ஆதரவாக 15 மதங்கள் அடங்கிய சிறுபான்மை சமூகங்கள் உள்ளன. இதில் ஷியா முஸ்லீம்கள் 12% ,டோக்ராஸ் காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர், பெளத்தர்கள், குஜ்ஜார் முஸ்லீம்கள்(14%), கிறிஸ்த்தவர்கள், பஹாடி முஸ்லீம்கள்(8%) இப்படி 45% சிறுகுழுக்கள் தேசியத்துக்கு ஆதரவாக பாரதத்தோடு தொடர்ந்து இணைந்திருக்க விரும்புகின்றனர். 

07. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 22 மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றுள் 5 மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே பிரிவினை வாதத்திற்கு ஆதரவாக உள்ளனர். 

08. பெயரிட்டுச் சொன்னால் ஶ்ரீநகர், ஆனந்த் நாக், பாரமுல்லா, டோதா, புல்வாமா ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் தான் பிரிவினையை ஆதரிக்கின்றனர்.

09. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த 5 மாவட்டங்களில் வசிக்கும் 15% சுன்னி பிரிவு இஸ்லாமியர்கள் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாக வன்முறையை அரங்கேற்றுகிறார்கள்.

10. மீதமுள்ள 17 மாவட்ட மக்கள் பிரிவினைக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

11. 90% முஸ்லீம்கள் வசிக்கும் பூஞ்ச், காஷ்மீர் ஆகிய இருமாவட்டங்களின் சரித்திரத்திலேயே இதுவரை பிரிவினைக்கு ஆதரவாக எந்த வித போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. 

12. மொத்தத்தில் சுமார் 31% மக்கள் மட்டுமே பாரதத்திற்கு எதிராகப் பிரிவினையை ஆதரிக்கின்றனர். மீதமுள்ள 69% மக்கள் பிரிவினையை உறுதியாக எதிர்ப்பதோடு, பாரதத்தோடு இணைந்திருக்கவே விரும்புகின்றனர்.

13. வெறும் 15% சன்னி முஸ்லீம்களின் பிரிவினைவாதப் போராட்டத்தை எதோ ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மக்களும் போராடுவதாக ஒரு மாயத் தோற்றத்தைச் சில ஊடகங்கள் முன் வைக்கின்றன. இது முழுக்க முழுக்க தேசவிரோத செயல்.

14. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களும் கூட இன்று பாரதத்தோடு இணைய விரும்புகின்ற சூழ்நிலையில் தேசவிரோத, போலி, பாகிஸ்தான் ஆதரவு  ஊடகங்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.


ஜம்மு காஷ்மீர் குறித்து நாம் அறியாத சில விஷயங்கள் 

ஒவ்வொரு பாரதியனும் அவசியம்  அறிந்திருக்க வேண்டும்...

1.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலப்பரப்பு என்பது  காஷ்மீர் என்பது 15% வும் ஜம்மு 26%  வும் லடாக் 59% வும் ஆகும்..

2.சுமார் 85000 சதுர கிமீ பரப்பளவு கொண்டது இதில் 85% இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றார்கள் ,மொத்த ஜனத்தொகை 1.25 கோடியாகும்

3.காஷ்மீரீல் மட்டும் 69 இலட்சம் பேர் வாழ்கின்றனர் இதில் 55 இலட்சம் காஷ்மீரி மொழி பேசுகின்றனர் மீதம் உள்ள 14 இலட்சம் பேர் பாகிஸ்தானி உருது மொழி பேசுகின்றனர்.ஜம்முவில் 53 இலட்சம் பேர் டோக்ரி ,பஞ்சாபி,ஹிந்தியும் மற்றும் லடாக்கில் 3 இலட்சம் பேர் லடாக்கியும் பேசுகின்றனர்.இதில் 7.5 இலட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் சட்டவிரோதமாக  பாக்கிஸ்தான்லிருந்து ஊடுருவி வசிக்கின்றார்கள் 

4.ஜம்மு காஷ்மீரீல் மொத்தம் 22 மாவட்டம் இருக்கிறது இதில் 5மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே  பிரிவினை வாதத்திற்கு ஆதரவாக உள்ளனர்.. அதாவது ஶ்ரீநகர், ஆனந்த் நாக்,பாரமுல்லா,டோதா ,
புல்வாமா ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் தான் பிரிவினையை ஆதரிக்கின்றனர்..மீதமுள்ள 17 மாவட்ட மக்கள் பிரிவினைக்கு எதிராகவும் பயங்கரவாதிக்ச்ளுக்கு எதிராகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாகவும் உள்ளனர்..
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த 5 மாவட்டங்களில் வசிக்கும் 15% சுன்னி பிரிவு இஸ்லாமியர்கள் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாகவும் வன்முறையை அரங்கேற்றுகிறார்கள்

5.ஜம்மு காஷ்மீரீல் தேசியத்துக்கு ஆதரவாக 15 மதங்கள் அடங்கிய  சிறுபான்மை சமூகங்கள் ஆகும் இதில்  ஷியா முஸ்லீம்கள் 12% ,டோக்ராஸ் காஷ்மீர் பண்டிட்கள்,சீக்கியர்,பெளத்தர்கள்,குஜ்ஜார் முஸ்லீம்கள்(14%),கிறிஸ்த்தவர்கள் , பஹாடி முஸ்லீம்கள்(8%) இப்படி 45% சிறுகுழுக்கள் தேசியத்துக்கு ஆதரவாக பாரத்தத்தோடு தொடர்ந்து  இணைந்திருக்க விரும்புகின்றனர்  
மொத்தத்தில் 31% மக்கள் மட்டுமே பாரதத்திற்கு எதிராக  பிரிவினையை ஆதரிக்கின்றனர் மீதமுள்ள 69% மக்கள் பிரிவினையை எதிர்ப்பதோடு பாரதத்த்தோடு இணைந்திருக்கவே விரும்புகின்றனர்.

6. தற்போது வன்முறையை  முன்னெடுத்து போராடும் பிரிவினைவாத பயங்கரவாத ஆதரவாளர்கள் மேற்சொன்ன 5 மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே மீதியுள்ள 17 மாவட்டத்திலுள்ள மக்கள் எவரும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக இல்லை.

7.90 % முஸ்லீம்கள் வசிக்கும் பூஞ்ச் ,காஷ்மீர் ஆகிய இருமாவட்டங்களின் சரித்திரத்திலேயே இதுவரை பிரிவினைக்கு ஆதரவாக எந்த வித போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை 
இது வரலாற்று பதிவு...

8.வெறும் 15% சன்னி முஸ்லீம்களின் பிரிவினைவாத போராட்டத்தை எதோ ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மக்களும் போரடுவதாக ஒரு மாயத்தோற்றத்தை தேசவிரோத எழுத்து ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் சேர்ந்து ஊளையும் ஒப்பாரியும் வைக்கின்றன.. இது முழுக்க முழுக்க தேசவிரோத செயல் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை....இவர்களை முதலில் கவனிக்க வேண்டிய வழியில் கவனித்தாலே போதும் காஷ்மீர் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும்

9.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் கூட இன்று பாரத்ததோடு இணைய விரும்புகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் தேசவிரோத போலி ஊடகங்களை நாம் புறக்கணித்தே ஆகவேண்டும்.

இந்த போலியான பிரச்சாரங்களை நடத்துவது யாரென்று பார்த்தால் 
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் பாகிஸ்தானும் மற்றும் பர்கா தத்தை போன்ற ஊடானஸ் ஊடகவியாதியும் சில தீவிர இடது சாரிகளுமாவர் இவர்களுடைய திட்டமே மீண்டும் பாரதத்தை துண்டாடி பாகிஸ்தானோடு சேர்க்கவேண்டும் என்பதே..

நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!

நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!

1. காற்புள்ளி (,) 
2. அரைப்புள்ளி( ; ) 
3. முக்காற்புள்ளி (:) 
4. முற்றுப்புள்ளி ( . ) 
5. வினாக்குறி (?) 
6. உணர்ச்சிக்குறி (!) 
7. இடையீட்டுக்குறி ( – ) 
8. பிறைக்குறி அல்லது அடைப்புக்குறி ( () ) 
9. ஒற்றை மேற்கோள்குறி (' ') 
10.இரட்டை மேற்கோள்குறி (" ") 
11. விழுக்காடு குறி (%) 
12. விண்மீன் குறி (*) 
13. வலம் சாய்க்கோடு (/)
14. இடம் சாய்க்கோடு (\) 15.கொத்துக்குறி(#)
16. தொப்பிக்குறி(^)
👇🏻
📚 காற்புள்ளி
1)           பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும்.
அ) தாய், தந்தை, தமையன், தங்கை என்னும் நால்வர் வீட்டில் உள்ளனர்.
ஆ) நான் வங்கிக்குச் சென்று, பணத்தை எடுத்து, பின்பு கடையில் சில பொருட்கள வாங்கிக் கொண்டு, வரும்வழியில் கோவிலுக்கும் சென்றுவந்தேன்.
இ) ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன.
2)           விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும்.
அ) ஆருயிர்த் தந்தையே, வணக்கம்
ஆ) இன்பத்திலும், துன்பத்திலும் இணைபிரியா நண்பரே, வருக.

3) வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கத்தைக் கருதி, காற்புள்ளி இடவேண்டும்.
அ) கண்ணன் அண்ணனைப் பார்த்து, ‘ உங்கள் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்’ என்றான்.
ஆ) ஒருவன் நன்றாகப் படித்து முடித்தபின், பரீட்சைக்குப் பயப்படமாட்டான்.
4) இணைமொழிகளுக்கு இடையில் காற்புள்ளி இடவேண்டும்.
அ) மேலோர் கீழோர், அரசன் ஆண்டி என்ற பாகுபாடு காலனிடம் இல்லை.
5) ஆனால்,ஆயின், ஆகையால், எனவே,  போன்ற சொற்களுக்கு முன் காற்புள்ளி அவசியம்.
அ) கந்தன் மிக நல்லவன் ; ஆனால் , அவன் படிப்பில் குறைந்தவன்.
ஆ) வள்ளுவர் மிகச் சிறந்த ஞானியே; ஆனால் அவர் தம்மை உலகிற்கு அறிவிக்காமல் போனது பெருங்குறையே.
இ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து; ஆகையால், சிறுவயது தொட்டே சிரத்தையுடன் கல்விகற்கவேண்டும்.

🔹அரைப்புள்ளி

1) பல செயல்களைக் குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும்.
அ) கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள் ;  மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள்.
ஆ) பண்டை இலக்கியங்கள் அனைத்தும் சிறந்தனவே; ஆனால், அவை எளிய நடையில் அமைந்தன என்று கூறல் இயலாது.

🔹முக்காற் புள்ளி

1)சொற்றொடரில் கூறிய ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும்.
அ) பால் ஐந்து வகைப்படும்: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால் என்பன.
ஆ) பொருள் கூறுக: கோன், மஞ்சு, குஞ்சரம்.
இ) முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

🔹முற்றுப்புள்ளி

1)சொற்றொடர்கள் பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்பெறல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
அ) அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை.
ஆ) நான் நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.
2) சொற்குறுக்கத்தையும் (திரு.) பெயர்க்குறுக்கத்தையும் (ம.ப.பா.) அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
வினாக்குறி
வினாப்பொருளைத் தரும் சொற்றொடர்களுக்குப் பின் வினாக்குறி இடுதல் வேண்டும்.

🔹உணர்ச்சிக்குறி

1)மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
அ) போட்டியில்  எனது நண்பர் வென்றுவிட்டார்!  (மகிழ்ச்சி)
ஆ) எனது உறவினர் ஒருவருடன் இப்பொழுததான் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தேன். அதற்குள் அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்துவிட்டதே! (வியப்பு)
இ) கொடியவன் ! கொடியவன் ! (அச்சம்)
இடையீட்டுக் குறி     (          )      ]
ஒரு சொற்றொடரின் இடையில் கருத்தை நன்கு விளக்கும் பொருட்டு, அச் சொற்றொடருடன் தொடர்புற்ற தனிக்கூற்றுச் சொற்களை அடக்கி எழுதும்போது, அவ்வாறு அடங்கி இருப்பதைக் காட்ட, அத் தனிக்கூற்றின் இருபக்கங்களிலும், இவ்வாறு சிறுகோடு அல்லது பிறைக்குறி, அல்லது பகர வளைவுக்குறி இடுதல் வேண்டும்.
அ) திருக்குறள் தமிழகத்திற்கு (ஏன் உலகத்திற்கே) பெருமை தேடித்தருகின்றது.
ஆ) சிற்றம்பலத்திற்கு இன்றோடு பன்னிரண்டு அகவை (ஆண்டு) நிறைவுற்றது.
இ) இயற்கைப் பண்பாட்டோடு வாழ்கின்றவர், உலகத்தையே பரிசாகக் கொடுத்தாலும் ஒழுக்கத்தினின்று தவறமாட்டார்.
பிறைக்குறி
மொழிபெயர்க்கும் போதும், அருஞ்சொற்பொருளை விளக்கும்போதும், சிறுபிரிவுகளை எண்ணிக்கொண்டு வரும்போதும், பிறைக்குறி இடவேண்டும். இக்குறியை இடைப்பிறவரல் என்றும் கூறுவர்.
அ) பேச்சுத்திறன் (oratory) மாணவரிடம் இருத்தல் வேண்டும்.
இரட்டை மேற்கோள் குறி
பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும்போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும், இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
‘அறஞ்செய்ய விரும்பு’ என்று ஒளவையார் கூறியுள்ளார்.
ஒற்றை மேற்கோள் குறி
இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி
இடுதல் வேண்டும். எழுத்துக்களையோ சொல்லையோ, ஒருவர் கருத்தில் சிறு பகுதியையோ எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
(அ)  ‘அ, இ, உ’    –  இவை மூன்றும் சுட்டெழுத்துக்கள்.

காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்

காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்

உடலானது ஆரோக்கியமாக இருக்க சுவையாக சமைத்து உண்ணும் காய்கறிகளை நன்கு பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு சமைக்க பயன்படும் காய்கறிகளை சிலருக்கு எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று இன்னும் தெரியாது. ஏனோ தானோவென்று வாங்கிய பின், என்னை ஏமாற்றிவிட்டான் என்று புலம்புவதே பலரது நிலைமை. மேலும் முற்றல் இல்லாமல் பிஞ்சாக இருந்தால் சமையலானது சுவையாக இருக்கும்.
எனவே சுவையான சமையல் செய்ய நல்ல காய்கறிகளை வாங்க வேண்டும். அதற்கு சில டிப்ஸ் இருக்கிறது. 

உருளைக்கிழங்கு: முளைக்கட்டாமல், பச்சை பச்சையாக நரம்பு தெரியாமல் இருக்க வேண்டும். மேலும் தோலை கீறினாலே கையோடு வர வேண்டும்.

.பெரிய வெங்காயம்: பெரிய வெங்காயத்தின் மேல் பகுதியில் இருக்கும் தண்டுப் பகுதி பெரிதாக இல்லாமல் வாங்க வேண்டும்.

  வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும் 

பூண்டு: பூண்டை வாங்கும் போது பல் பல்லாக வெளியே நன்கு தெரியுமாறு இருப்பதை வாங்க வேண்டும்

பெங்களூர் தக்காளி: நன்றாக சிவந்த தக்காளியாக இருப்பதை வாங்க வேண்டும். அதுவும் பெங்களூர் தக்காளி ஒரு வாரம் கூட கெடாமல் இருக்கும்.

பச்சை மிளகாய்: மிளகாயானது நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். அதே குண்டாக இருந்தால் காரம் அதிகமாக இருக்கும். மேலும் இந்த குண்டு மிளகாயை சேர்க்கும் போது வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

முருங்கைக்காய்: 'முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து வாங்கணும்' என்று சொல்வார்கள். இவ்வாறு முறுக்கும் போது நன்கு வளைந்தால், காய் முற்றவில்லை என்று அர்த்தம்.

கத்தரிக்காய்: கத்தரிகாய் வாங்கும் போது தோலானது மென்மையாக இருக்க வேண்டும். முற்றல் காயாக இருந்தால் தோலானது கடினமானதாக இருக்கும்.

இஞ்சி: தோலை கீறினால், தோலானது ஈஸியாக பெயர்ந்து வர வேண்டும். அப்போது தான் நார்ப்பகுதி குறைவாக இருக்கும்.

காலிஃப்ளவர்: குருமாவுக்கு சுவையைத் தரும் காலிஃப்ளவரை வாங்கும் போது பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் வாங்க வேண்டும். இதில் தான் காம்புகள் தடிமனாக இருக்காது.

புடலங்காய்: கெட்டியாக இருக்கும் புடலங்காயை வாங்க வேண்டும். இதில் தான் சதைப்பகுதி அதிகமாகவும், விதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.

பீன்ஸ்: பீன்ஸில் 2 வகைகள் இருக்கிறது. பிரெஞ்ச் பீன்ஸில் நார் அதிகமாக இருக்கும். புஷ் பீன்ஸில் நார் குறைவாக இருக்கும். இவற்றில் நார் குறைவாக இருப்பதையே அதிகம் விரும்புவர். இந்த பீன்ஸ் வாங்கும் போது தோலானது மென்மையாக இருக்க வேண்டும். அதுவே மிகுந்த சுவையாக இருக்கும்.

பாகற்காய்: பாகற்காயை வாங்கும் போது உருண்டையாக இருப்பதை வாங்குவதைவிட, தட்டையான, நீளமான காயாக வாங்க வேண்டும்.

மேற்கூறியவாறு வாங்கினால் காய்களானது நீண்ட நாட்கள் இருப்பதோடு, சமையலும் சுவையாக இருக்கும்.

 வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது

  சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்  

மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம்

 கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
  

குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

  மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

  பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது

 கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது
 பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

சேப்பங்கிகிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் 
  
 சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது


வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

 சௌ சௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

இந்திய வரலாறு - ஒரு குறிப்பு

இந்திய வரலாறு - ஒரு குறிப்பு
----------------------------------------------
கிமு 3500-1500 - சிந்து வெளி நாகரிகம்
கிமு 1000 - கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்
கிமு 900 - மகாபாரதப் போர்
கிமு 800 - இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்
கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்பு
கிமு 554 - புத்தரின் நிர்வாணம்
கிமு 518 - பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா
கிமு 326 - அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு
கிமு 321 - பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்
கிமு 272-232 - அசோகர் ஆட்சி
கிமு 185 - புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
கிமு 58 - விக்கரம் ஆண்டு
கிமு 30 - தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்

கிபி 40 - சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி
கிபி 52 - புனித தாமஸ் இந்தியா வருகை
கிபி 78 - சகா சகாப்தம் ஆரம்பம்
கிபி 98-117 - கனிஷ்கரின் காலம்
கிபி 320 - குப்த சாம்ராஜ்யம் உருவாதல்
கிபி 380-143 - சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது
கிபி 405-411 - பாகியான் வருகை
கிபி 606 - ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
கிபி 609 - சாளுக்கிய வம்சம் தோற்றம்
கிபி 622 - ஹீஜிரா வருடம் துவக்கம்
கிபி 629-645 - யுவான் சுவாங் வருகை
கிபி 712 - முகமது பின் காசிம் படையெடுப்பு
கிபி 985 - ராஜராஜன் சோழன் காலம்
கிபி 1001-1026 - முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு
கிபி 1191 - முதலாம் தரைன் யுத்தம்
கிபி 1192 - இரண்டாம் தரைன் யுத்தம்
கிபி 1206 - டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்
கிபி 1221 - ஜென்கின்கான் படையெடுப்பு
கிபி1232 - குதும்பினார் கட்டப்பட்டது
கிபி1298 - மார்க்கபோலோ இந்தியா வருகை
கிபி1333 - இப்னுபத்துக் இந்தியா வருகை
கிபி1336 - தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்
கிபி1347 - பாமினி அரசு துவக்கம்
கிபி1398 - தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 - டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 - லோடி வம்சம்
கிபி1496 - குருநானக் பிறப்பு
கிபி1498 - வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 - போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526 - முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 - குருநானக் இறப்பு
கிபி1556 - ஆக்கப் பதவி ஏற்பு - இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65 - கானிகோட்டா யுத்தம்
கிபி1576 - ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 - கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604 - சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631 - தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 - சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 - டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 - நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
கிபி1748 - முதல் ஆங்கிலேய - பிரஞ்சுப் போர்
கிபி1757 - பிளாசிப் போர்
கிபி1761 - மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 - பாக்ஸர் போர்
கிபி1790-92 - மைசூர் போர்
கிபி1799 - நான்காம் மைசூர் போர்
கிபி1803 - ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 - மராத்தியர் தோல்வி
கிபி1835 - ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 - ஆங்கிலேயர் - சீக்கியர் போர்
கிபி1853 - முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் - தானே)
கிபி1857 - முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
கிபி1858 - கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
கிபி1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 - முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 - மின்டோ - மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 - முதலாம் உலகப் போர்
கிபி1919 - மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
கிபி1920 - காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
கிபி1921 - பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
கிபி1922 - சட்ட மறுப்பு இயக்கம்
கிபி1928 - சைமன் கமிஷன் வருகை
கிபி1931 - காந்தி - இர்வின் ஒப்பந்தம்
கிபி1934 - சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது
கிபி1938 - காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா
கிபி1942 - வெள்ளையனே வெளியேறு போராட்டம்
கிபி1945 - ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிட்டிஷாரிடம் தோல்வி
கிபி1947 - இந்தியா விடுதலையானது (சுதந்திரம் பெற்றது

சமையலில் செய்யக்கூடாதவை

சமையலில் செய்யக்கூடாதவை

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.�

கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் தமிழரின் தொன்மை!

கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் தமிழரின் தொன்மை!

பத்தாயிரம் ஆண்டு பழமையான துறைமுக நகரம் கண்டுபிடிப்பு!!

சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். ஒருமுறை கடலுக்கு அடியில் சென்ற பொழுது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.

‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். 

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

உச்சநீதிமன்ற நீதிபதி

 உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்போ, குறிப்பிட்ட கால வரம்போ வரையறுக்கப்படவில்லை.

* உச்சநீதிமன்ற மீதிபதி தமது பதவியை தமது 65 வயது நிறைவுற்றாலோ, அல்லது குடியரசுத் தலைவருக்கு பதவி விலகல் கடிதம் அளிப்பதன் மூலமாகவோ, அல்லது பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்ள மொத்த உறுப்பினர்களில்வந்திருந்து வாக்களித்தவர்களின் மூன்றில் இரு பங்கு ஆதரவினால் நிறைவேற்றப்பட்டதீர்மான்த்தின் அடிப்படையிலோ பதவி நீக்கம் பெறலாம் அல்லது இழக்கலாம்.

* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காலியானாலோ, அல்லது அவர் பணியாற்ற இயலாத சூழ்நிலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வேறு ஒருவரை பணியமர்த்த அதிகாரம் பெற்றுள்ளார்.

* குடியரசுத் தலைவரின் முன் அனுமதிபெற்று, தற்காலிகமாக ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிபுரிய அழைக்கவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிகாரம் பெற்றுள்ளார்.

* அது போன்று போதிய நீதிபதிகள் இல்லாத சூழ்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற ஒருவரை, உச்சநீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியைக தற்காலிகமாகப் பணியாற்றவும் வழி செய்யப்பட்டுள்ளது.

* உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை குற்ற விசாரணை நடைமுறைப்படுத்தகுடியரசுத் தலைவருக்கு அளிக்கத்தக்க, லோக்சபையாக இருப்பின் 100 உறுப்பினர்களால்கையொப்பமிடப்பட்டு, சபாநாயகரால் ஒப்பளிக்கப்பட்டதீர்மானமோ, அல்லது இராஜ்ய சபையாக இருப்பின் 50 உறுப்பினர்களால்கையொப்பமிடப்பட்டு, தலைவரால் ஒப்பளிக்கப்பட்டதீர்மானமோ நிறைவேற்றப்பட வேண்டும்.

* அத்தீர்மானம் மீன்று நபர்கள் கொண்ட ஒரு குழுவினால் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும் ஒரு நீதித்துறை வல்லுநர்) விசாரிக்கப்படும்.* அக்குழு, குற்றாவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டநீதிபதியின் திறமையின்மை அல்லது தவறான நடத்தையை கண்டறிந்து உண்மையெனக் கண்டால் சபைக்குப் பரிந்துரைத்து அறிக்கை அளிப்பர்.

* அதன்பின்பு அத் தீர்மானம் குழுவின் அறிக்கையுடன், டபையில் புகுத்தப்படும்.அத்தீர்மானம் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும், மொத்த உறுப்பினர்களில்வந்திருந்து வாக்களிப்போரில்மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின்ஆதரவு பெற்று நிறைவேற்றப்பட்டால், பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்.

* இதன் பிறகு குடியரசுத் தலைவரின் சம்மந்தப்பட்ட நீதிபதியின் பதவி நீக்கத்தை அறிவிப்பார்.

* 1991 - 93ல் ஆர்.இராமசாமி என்ற நீதிபதியின் மீது குற்றவிசாரணை கொண்டு வரப்பட்டு, குழு தனது அறிக்கையில் குற்றத்தை உறுத்ப்படுத்தியது.

* எனினும், அப்போதைய லோக்சபையில் காங்கிரஸ் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமால் புறக்கணித்ததால், போதிய பெரும்பான்மையின்றி, குற்றவிசாரணைத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது.

* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தனித்தியங்கு தன்மை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக செயல்படுவதற்கெனசில செயல்பாடுகளை அரசியலமைப்பு செயல்படுத்துகிறது. அவை:

* உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகளை நியமிக்கும்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஆலோசித்தே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும்.

* ஒருமுறை நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டால், அவர் திறமையின்மை, தவறான நடத்தை ஆகிய காரணங்களுக்காக மட்டும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின்பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதீர்மானத்தின் மூலமாக மட்டுமே, குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம்செய்யப்பட வேண்டும்.

 உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு- 26 ஜனவரி 1950

* உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லை - இந்தியா

* உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் - புதுதில்லி

* உச்சநீதிமன்றத்துக்கான அதிகாரமளிப்பு - இந்திய அரசியலமைப்பு

* உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கான மேல்மூறையீடு - இந்தியக் குடியரசுத் தலைவர்(தூக்கு தண்டனை உள்பட தண்டனையை நீக்க மட்டும்.

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன முறை - நிர்வாக தேர்வு (கோட்பாடுகளுக்கு உட்பட்டது)

* உச்சநீதிமன்றத்தின் குறிக்கோளுரை - அறம் உள்ளவிடத்து வெற்றி உள்ளது.

* தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - பி.சதாசிவம். (19 ஜூலை 2013)

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகள்:

* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

* தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலே அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களிலோ நீதிபதியாகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

* தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களிலோவழக்கறிஞராகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

* குடியரசுத் தலைவரின் கருத்தின்படி ஒரு சிறந்த நீதித்துறை அறிஞராக இருத்தல் வேண்டும்.


கேப்டன் விஜயகாந்த்

கேப்டன்  விஜயகாந்த்

விஜயகாந்த் எனப்படும் 
அ. விஜயராஜ் நாயுடு ஒரு திரைப்படநடிகர். தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவர். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும்,எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

பெரும்பாலும் ரஜினிக்கு பிறகு இருந்து அஜித், விஜய் நடிக்க வரும்வரை இருந்த காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளின் பிடித்தமான ஹீரோ விஜயகாந்தாக தான் இருந்தார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் பிடிக்காத தீவிரவாதிகளே கிடையாது, படத்தில்.. அது மட்டுமல்லாது தமிழில் குடும்பத்துடன் பார்க்கும் சில நடிகர்களின் திரைப்படங்களில் இவரது படங்களும் உண்டு. ஆக்‌ஷன் படம் வேறு. குழந்தைகளுக்கு ஒரே குதூகலம் தான் போங்க. அப்படி விஜயகாந்தை ஒரு நடிகனா பார்க்காமல் நாட்டை காப்பாற்றும் ஒருவராக பார்த்தவர்கள் பலர்.

விஜயராஜ்

விஜயராஜ் (இயற்பெயராம்) மதுரையில் அழகர்சாமி - ஆண்டாள் தம்பதியின் மூன்றாம் குழந்தையாக பிறந்தவர். இளம் வயதில் முட்டு சந்து நாடார் கடைல பல்பம் வாங்கி திண்பது, தீப்பெட்டி சீட்டு, கோலி, கில்லி ஆடுவது இவரின் வாடிக்கை. நம்மைப்போல இருக்கார்ல. மதுரை தாவணிகளை கவருவதற்காக கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டுவது பிடித்தமானது... ஆனாலும் அண்ணன் ஒரு பூந்தோட்ட காவல்காரன்.

காதல் மன்னன்

இப்படி புயலாய் போய்ட்டு இருந்தவர் வாழ்வில் இந்தி போராட்டம் வந்துள்ளது., அதனால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ரைஸ்மில்லை பார்க்க போய்ட்டார். அங்கதான் அந்த மேட்டர் நடந்துருக்கு... இது இன்ன வரைக்கும் யாருக்கும் தெரியல...

தலைவர் மில்லு பக்கத்துல இருக்குற ஒரு டீ க்கடைல நின்னு தம் பத்த வைக்கிறது வழக்கம். அந்த ஸ்டைல பாத்து எதிர் வீட்டி ஜன்னல் ஒண்ணு (கண்கள் இரண்டால்  ’ஸ்வாதி’ மாதிரின்னு வச்சுக்குங்களேன்) பிக்கப் ஆயிடுச்சு. அதுக்காக எப்பயும் நம்பியார் மாதிரி இருக்கும் அண்ணன் பூப்போட்ட சட்டை & பெல்ஸ் பேண்டு கணக்கா மில்லுக்கு வரப்போக மாறிட்டார். இங்க தான் கதைல ஒரு டுவிஸ்டே..! பாவம் திடீர்னு ஒரு நாள் எதிர்வீட்டு ஜன்னல் திறக்கவே இல்லை. விசாரிச்சு பார்த்தா அது லீவுக்கு வந்த குயிலாம். அதான் பறந்து போயிடுச்சு. அண்ணன் தான் பாவம் மனசு உடைஞ்சு போயிட்டாராம். இது மாதிரி அவர் வாழ்க்கைல இன்னும் 2 காதல்களும் வந்து போயிருக்கு..!?

மதுரைல சேனாஸ் சினிமா கம்பெனி  வச்சிருந்த மர்சூக் & எம்.ஏ.காஜா, இந்த 2 பேரும் தான் கேப்டனின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டவர்கள். பின்பு எஸ்.ஏ சந்திரசேகர் இவர் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். அதனால் தான் இன்னமும் தான் அர்ச்சனை செய்யும் போது சந்திரசேகர் பெயருக்கும் சேர்த்தே அர்ச்சனை செய்து வருகிறார். இன்னொருவர் இவரது நண்பர் அ.செ. இப்றாஹீம் ராவுத்தர், பால்ய பருவத்திலிருந்தே நண்பர்களாக உள்ளனர். அதனால் தான் வேறு மொழிப்படங்களை ஒத்துக்கொள்ளாதவர் இவருக்காக ’மே டே’ என்ற ஆங்கிலப்படத்திற்கு பூஜை போட்டார்., அதுவும் வெளிவரவில்லையாம்.

தமிழ் சினிமாவின் முதல் 3-டி படமான அன்னைபூமி யின் ஹீரோ சாத்சாத் விஜயகாந்தே.! 1984-ம் வருடம் பதினெட்டு படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார். அதில் சில... சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள் மற்றும் ஆபாவாணன் இயக்கிய உரிமைக்குரல். என நடிப்பில் பல பரிணாமங்களை காட்டிய ஆண்டு அது. அந்த ஆண்டே கலைஞர் கையால் ஷீல்டு வாங்கினார்., அன்றிலிருந்து கலைப்புலி தாணுவால் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டார். அதுவே இன்று உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் அறியப்படுகிறது...

எம்.ஜி.ஆரும் கறுப்பு எம்.ஜி.ஆரும்

விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர். ஆனால் அவரால் எம்.ஜி.ஆர் கூட சேர்ந்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனோ?? திமுக பக்கம் ஓவரா சாய்ந்ததாலோ என்னவோ?  தெரியல.. 

ஆனால் வி.என்.ஜான்கி அம்மையாரோடு நல்லா பழகியவர் கேப்டன். தன் பிறந்த நாளுக்கு வருஷா வர்ஷம் 50ஆயிரம் ரூபாய் ராமாவரம் காது கேளாதோர் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்து வர்றார். அந்த மதிப்பின் காரணமா தான் எம்.ஜி.ஆர். பயன்படுதிய பிரச்சார வேனை அன்பளிப்பா கொடுத்தாங்கலாம்.

இது மட்டும் இல்லீங்க... வாரம் 300 பேருக்கு ஞாயிற்றுகிழமை அன்னிக்கு  அன்னதானம், வருஷா வருஷம் இலவசமா ஏழைகளுக்கு திருமணம், கார்கில்லுக்கு 5 இலட்சம்., ஒரிசாவுக்கு 2 இலட்சம்., குஜராத் பூகம்ப நிதிக்கு 2 இலட்சம்., ஆந்திரா புயலுக்கு 2 இலட்சம்., சுனாமி நிவாரணமா தமிழ்நாட்டுக்கு 11 இலட்சம், பாண்டிசேரிக்கு 2 இலட்சம்., கும்பகோணத்துல உயிரிழந்த குழந்தைகளுக்கு தலா 1 இலட்சம்., இப்ப கூட இலங்கைக்கு 6 இலட்சம்னு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் கேப்டன் விஜயகாந்தோடது...

அதனால தான் அவரை கறுப்பு எம்.ஜி.ஆர்-னு தேமுதிக காரங்க கூப்பிடுறாங்க., நாமளும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்., அதுல ஒண்ணும் தப்பில்ல. தமிழ்நாட்டுல சம்பாதிச்சு வேற மாநிலத்துல் சொத்து வாங்கி குமிக்கிறவங்க மத்தில தமிழனுக்காக மட்டுமில்லாம மத்தவங்களுக்காகவும் இறக்கப்படுற நம்ம கேப்டன் எவ்வளவோ பரவாயில்ல...

கேப்டனும் பிரபாகரனும்

விஜயகாந்தும் தலைவர் பிரபாகரன் மீது பற்று கொண்டவரே. அதனால தான் ஈழத்தமிழர்கள் இன்னல் தீரும்வரை  தான் பிறந்த நாளே கொண்டாட போவதில்லை என்று கூறியவர். மேலும் 60 பேர் தாயகம் திரும்ப பல உதவிகளை செய்தவர்.

பலர் எதிர்த்த போதும் தன்னுடைய 100வது படத்துக்கு ’கேப்டன் பிரபாகரன்’ என்று பெயரிட்டவர். தன்னுடைய மகனுக்கும் கூட அப்பெயரே வைத்தார்.

விஜயகாந்த்

எனப்படும் அ. விஜயராஜ் நாயுடு ஒரு திரைப்படநடிகர். தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவர். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும்,எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

திரைப்பட உலகில்

இயக்குநர் காஜா 'விஜயராஜ்' என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார். திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்குவந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார்.இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம்தான் இவருக்குகேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது.

மண வாழ்க்கை

விஜயகாந்த், 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

அரசியல் உலகில்

அதன் தொடர்ச்சியாக 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்.

அரசியல் கட்சி

2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

சட்டமன்ற உறுப்பினர்

2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுதமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்னார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011இரிஷிவந்தியம் தொகுதியிலில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது.2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்றஉறுப்பினராகவும்,எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், ரமனா, போன்ற படங்களும் லியாகத் அலிகான் அவர்களின் அனல் தெறிக்கும் வசனங்களும் அவருடைய அரசியல் பயணத்திற்கு விதையாக இருந்தது என்றால் மிகையாகாது...

கட்சியின் தலைவர் ஆனதால் தானே முன்வந்து நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர் கேப்டன் எனபது குறிப்பிடத்தக்கது.