.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Sunday 28 August 2016

மண்பாண்ட மகிமை:

மண்பாண்ட மகிமை:

உலகின் முதன் முதல் மனிதன் செய்த தொழில் மண்பாண்டம். மண்பாண்ட சமையல்,ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது

☆ உணவில் சுவையைக்
கூட்டக்கூடியது. நீண்ட
நேரத்துக்குக் கெடாமலும் சுவை
மாறாமலும் இருக்கும். உணவும்
எளிதில் செரிமானம் ஆகும்.

☆ மண் பாத்திரத்தில் தயிரை
ஊற்றிவைத்தால் புளிக்காமல்
இருக்கும். தண்ணீர்
குளிர்ச்சியாகவும்,
சுவையாகவும் இருக்கும்.

☆ மண்பாண்டம் தவிர்த்து அந்தக்
காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு,
பித்தளை, வெண்கலம் என ஐந்து
வகையான உலோகங்களை நம்
முன்னோர்கள் பயன்படுத்தினர்.

☆ வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக்
குளிர்ச்சியைத் தரக்கூடியது.
பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச்
சமநிலைப்படுத்தும். பித்தளை
மற்றும் செம்புப் பாத்திரத்தில்
சமைக்கும் உணவு வயிறு
தொடர்பான பிரச்னைகள் வராமல்
தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக்
குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு
உண்டு.

☆ செம்புப் பாத்திரத்தில்
தண்ணீர்வைத்துக் குடித்தால்,
இருமல், இரைப்பு நோய் வராது.
இரும்புப் பாத்திரத்தில்
சமைக்கும்போது, உடலில் ரத்த
விருத்தி அதிகரிக்கும். உடலை
எஃகு போல உறுதிப்படுத்தும். கண்
சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
இளைத்தவனுக்கு இரும்புப்
பாத்திரம் என்பது அந்தக்கால
அறிவுரை.

☆ இப்படி உடல் ஆரோக்கியத்தைத்
தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப்
பாத்திரங்களைப் பயன்படுத்தினால்,
உடல் ஆரோக்கியமாக இருக்கும்.்

No comments:

Post a Comment