.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Saturday 27 August 2016

நீட் மருத்துவ நுழைவு தேர்வு

  • தர்மதுரை படம் கிராமத்திலிருந்து வரும்  இரண்டு தலைமுறை மருத்துவர்களைஅழகாக காட்டியிருக்கிறது,
  • படத்தை பத்தின விமர்ச்சனத்துக்கெல்லாம்பிறகு பார்க்கலாம் .
  • ஆனால் தர்மதுரை போல கிராமத்து மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு
  • இருக்கும் அத்தனை வைய்ப்பையும் மத்திய அரசு குழி தோண்டி புதைத்துவிட்டது.
  • தர்மதுரை படத்தை முன்னிட்டு இதை திரும்பவும் பதிகிறேன்..
  • மருத்துவத்திலும், மருத்துவக் கல்வியிலும் இந்தியாவிலேயே முன்னணிமாநிலமாக உள்ளது தமிழகம்தான். பிற மாநிலங்களில் இருந்தும் ,வெளிநாடுகளிலிருந்தும் தமிழகத்துக்கு சிகிச்சைக்காக பலர் வருகின்றனர்.
  • ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது.
  • எல்லா நடுத்தர குடும்பங்களின் கனவும் மருத்துவ படிப்பாகத்தான்
  • இருக்கிறது. ஆனால் அவர்களின் கனவிற்கு மத்திய அரசு வைத்திருக்கும் வேட்டைபற்றி எந்த கவலையும் இல்லாமல் கிடக்கிறது  நடுத்தர வர்க்கம்
  • நீட் மருத்துவ நுழைவு தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்..
  • இந்தியா முழுவதிற்கும் மருத்துவத்திற்கு ஒரே நுழைவு தேர்வு கொண்டு வர போகிறார்கள்.
  • மேலோட்டமா நியாமா தெரியும் உள்ள இருக்கும் சாதிகளை பாருங்கள்.
  • தமிழகத்தில் தான் அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகம், இங்கு நாம் உருவாக்கிவைத்திருக்கும் கல்லூரிகளில் MBBS ல் 85%, MD படிப்பில் 50% மும்நுழைவுத் தேர்வுகள் ஏதும் இல்லாமலே மாநில அரசின்  +2 மதிப்பெண்அடிப்படையில் நம் தமிழக மாணவர்களுக்கே கிடைத்துக் கொண்டிருந்தது.
  • இனி அவன் தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கு கூட மத்தியஅரசு நடத்தும் நுழைவு தேர்வு எழுதி இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களோடுபோட்டி போட வேண்டும்..
  • மேலும் அதற்கான நுழைவுத்தேர்வும் தமிழ் நாட்டு பாட திட்டத்தின்
  • அடிப்படையில் இருக்க போவதில்லை, அப்படியென்றால் கிராம புறங்களில்படிக்கும் மாணவர்கள் இனி மருத்துவ படிப்பிற்குள் நுழையவே முடியாமல்போகிறது.
  • தோராயமாக தமிழகத்தில் இருக்கும் 3000 மருத்துவ சீட்டில் 2500 சீட்டுக்குமேல் நம் குழந்தைகளுக்கே கிடைத்துக் கொண்டிருந்தது, அதாவது 260மாணவர்களில் ஒருவர் மருத்துவ படிப்பை பெற முடியும், இனி அவர் ஒருஇடத்திற்க்காக இந்திய முழுவதும் 3000 மாணவர்களுடன் போட்டியிட வேண்டும்,அவனுடைய சொந்த மண்ணில் இருக்கும் கல்லூரிகளுக்கு கூட.
  • அடுத்து இதயம் மூளை நரம்பு போன்ற  உயர் மருத்துவத்திற்காக இங்கு நாம்உருவாக்கி வைத்திருக்கும்  இடங்கள் 159, பஞ்சம் ஹரியானா மத்தியபிரதேசம்போன்ற இந்தியாவின் பத்து மாநிலங்களில் ஒரு இடம் கூட இப்படி கிடையாது. சிலமாநிலங்களை 5, 6 இடங்கள் மட்டுமே இருக்கின்றன.
  • இவ்வளவு அரிதான உயர் சிறப்பு மருத்துவ இடத்தை உருவாக்க நீண்டகாலமாகும்,நாம் கோடிகளை கொட்டி 159 இடங்களை உருவாக்கி இருக்கிறோம். இதுவரை இந்த 159இடங்களில் 50% கிட்டத்தட்ட 78 இடங்கள்  நம் தமிழக மாணவர்களுக்கு கிடைத்துவந்தது, இனி இந்த இடங்களையும் நமக்கில்லை.
  • SC ST, கோட்டா மட்டுமல்ல தமிழகத்தின் ஆண்ட சாதிகளில் இருந்தும் ஒவ்வொருஆண்டும் உருவாக வேண்டிய சுமார் 40 உயர் மருத்துவர்களை கருவிலேயே அளித்துவிடுகிறது மத்திய அரசு. எந்த ஆண்ட சாதி சங்கங்களும் தங்கள் சாதியில்உருவாக வேண்டிய மருத்துவ மாணவர்களுக்காக இதுவரை  போராடியதாகதெரியவில்லை..
  • அடுத்து இந்த உயர் மருத்துவ இடங்களில் 50% அரசு மருத்துவர்களுக்கே இதுவரைஒதுக்கி வந்திருக்கிறது, அப்போதுதான் உயர் மருத்துவ படிப்பு வரையாவதுஅல்லது அதற்க்கு பிறகும் நம் அரசு மருத்துவ மனைகளிலேயே இருப்பார்கள்.
  • அரசு மருத்துவ மனைகளில் இது போன்ற சிறந்த மருத்துவர்கள் இருப்பதால் தான்ஏழை எளிய மக்களுக்கும் சிறந்த மருத்துவம் கிடைத்து வந்தது..
  • மொத்த இடங்களும் மத்திய அரசிக்கு போகும்போது அரசு மருத்துவ மனைகளில் வேலைசெய்து கொண்டு படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
  • இன்னொரு சாதியையும் கவனியுங்கள். இந்த மருத்துவ நுழைவு தேர்வு AIIMS,
  • ஜிப்மேர் போன்ற மத்திய அரசின் மருத்துவ மனைகளுக்கு பொருந்தாதாம்,தமிழகத்தில்AIIMS ஜிப்மரோ கிடையாது.
  • அடுத்து வழக்கமாக சொல்வதுதான் இதுபோன்ற பொதுவான நுழைவு தேர்வு வைப்பதால்தனியார் மருத்துவ கல்லூரிகளில் பீஸ் குறையும் என்பது, ஆனால் மேட்டர்என்னன்னாமக்கள் நல்வாழ்வு அமைச்சகம் என்ன செய்திருக்கிறார்கள் என்றால்
  • பத்தாண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ கல்லூரி அனுமதிஅளிக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவந்த போது வணிக நோக்கோடு மருத்துவகல்லூரி பயன்படுத்தினால் அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்று சட்டம்இருந்தது இருந்தது. அதனை இப்போது  எடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர்..
  • மருத்துவ சீட்டிற்காக 74 கோடி ஏமாற்றியதாக  SRM பச்சமுத்து மீது குற்றம்சுமத்தப்பட்டதிலிருந்து இதில் புழங்கும் பணத்தை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment